Manohari Madan
Login / Register Login
Wishlist
0₹0.00
  • Home
  • Store
  • Blog
  • About Us
  • My account
    • Register
    • Members
    • Basket
    • Newsletter
    • Groups
    • Wishlist
  • Submit a review
  • Shop
  • Return Refund Policy
  • Navarathri 2020
  • Diwali Sweets

Diwali Sweets

RIBBON PAKKODA
மொறு மொறு ரிப்பன் பக்கோடா

 
மிகவும் சுலபமான முறையில் மொறு மொறு
ரிப்பன்பக்கோடா  செய்யும் முறை.
 
தீபாவளி நெருங்குகின்ற வேளையில்
என்ன காரம் இனிப்பு செய்வதென்று
யோசனையாகவே இருக்கும். மேலும்
வழக்கமாக  வீட்டில் பலகாரம் செய்பவர்கள்
உண்டு. சிலர் வெளியில் ஆர்டர் கொடுப்பது
சிலர் கடையில் வாங்கிக் கொள்வதுண்டு.
இந்த முறை கொரோனா அச்சம் இருப்பதால்
வெளியில் வாங்க தயக்கம் இருக்கும்.
அதனால் எளிய முறையில் வீட்டிலேயே
சில பலகாரங்கள் செய்து கொள்ளலாம்.
மேலும் அது மகிழ்வையும் மனநிறைவையும்
தரும்.
இப்போது நாம் ரிப்பன் பக்கோடா செய்யும்
முறை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு
அரிசி மாவு
மிளகாய்த்தூள்
உப்பு
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
பொறிப்பதற்கு சமையல் எண்ணெய்
மாவு பிசைவதற்கு தண்ணீர்.
 
செய்முறை
அகலமான பேசின் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் 1 கப் கடலை மாவு 1 கப் அரிசி மாவு காரத்தின் தேவைக்கேற்ப மிளகாய் தூள்
உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும். பிறகு
சிறிது பெருங்காயத்தூள் கறிவேப்பிலை
சேர்த்து ஒரு டேபிள்  ஸ்பூன் எண்ணெய்
அல்லது நெய் சூடு செய்து மாவில் விட்டு
நீர் விட்டு பிசைய வேண்டும் இறுக்கமாக
அதிக நீர் விடக்கூடாது. அடுப்பில் எண்ணெய்
கடாய் வைத்து எண்ணை ஊற்றி சூடேறியதும்  ரிப்பன் பக்கோடா அச்சில்
நிரப்பி எண்ணெயில் பிழிய வேண்டும்.நன்றக வெந்து பொறிந்த பின்
திருப்பி போட்டு எடுக்கலாம். அதிக சுவையுடன் மொறு மொறு ரிப்பன் பக்கோட ரெடி .சிறிதுநேரம்
ஆறவைத்து டின்னில்  நிரப்பி முடி வைக்கலாம். தீரும் வரை மொறு மொறுப்பாய்
இருக்கும். ஆனால் வெகு சீக்கிரம்  பறந்து விடும். நீங்களும் செய்து பார்த்து கருத்திடுங்கள்

Mysore Pak மைசூர்பாகு

நாவில் கரையும் மைசூர்பாகு செய்யும் விதம்
தேவையான பொருட்கள்
கடலை மாவு 1 கப்
சர்க்கரை 2  1/2 கப்
நெய் 1 1/4 கப்
தண்ணீர் 1 1/4 கப்
 
அகலமான கடாயில் கடலை மாவைக் கொட்டி
மிதமான சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும்
பச்சை வாசம் நீங்கும்  வரை. பிறகு அதை
வேறு தட்டில் மாற்றி ஆற வைக்க வேண்டும்.
பிறகு கடாயை அடுபபில் வைத்து நீர் ஊற்றி
அதில் சர்க்கரையைக் கொட்டி நீரில்
முழுவதும் கரையும் வரை கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்ததும்
சிறிது சிறிதாக  வறுத்த கடலை மாவைக்
கொட்டி  கிளற வேண்டும் அவ்வப்போது
நெய் சேர்த்து கிளற வேண்டும். நன்றாக
நுறைத்துக் கொண்டு வரும் வரை கிளற
வேண்டும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு
வரும் பதத்தில் நெய் தடவிய தட்டில்
கொட்டி  ஆற வைக்கவேண்டும். பத்து நிமிடத்தில் சிறிது செட் ஆனவுடன் சிறு சிறு
துண்டுகளாக கத்தியால் கீறி  விட்டு நன்கு
ஆறியவுடன் வெட்டி எடுக்கவும் .ஒரு துண்டை வாயில் போட்டு சுவைத்துப் பார்க்கவும். கமகம வென்று நாவில் கரையும் மைசூர் பாகு ரெடி.
டின்னில் போட்டு மூடி வைக்கலாம்.
 
 
 
 
 
 
Facebook
Archives
  • June 2021
  • May 2021
  • April 2021
  • September 2020
  • August 2020
  • July 2020
Categories
  • Mano"s Kitchen
  • My Garden
  • phtography
  • Tamil
  • Uncategorized
  • world photography day
Categories
Mano"s Kitchen My Garden phtography Tamil Uncategorized world photography day

FlipnRead is the largest Tamil poetry website

Subscribe to our list

Don't worry, we don't spam

 

Categories
Mano"s Kitchen My Garden phtography Tamil Uncategorized world photography day
Important links
  • Register
  • Members
  • Return refund policy
  • Privacy policy
  • Terms and conditions
  • Shipping & payment info
  • Contact
  • Whatsapp

Links
  • Blog
  • facebook
  • Whatsapp
  • manoharipoet@gmail.com

2021 ©FlipnRead.com . All rights reserved.
Manohari Madan
Logo
Log In
Free Books Videos Courses - Register Now for access!
Lost Password?
Don't have an account? Sign Up
Reset Password
Already have an account? Login