மனிதன்

காதலுக்கு கிளிகளையும்
காமத்துக்குச் சிட்டுக்களையும்

பேச்சுக்கு மைனாக்களையும்
பாடலுக்குக் குயில்களையும்

ஆணவத்திற்கு வான்கோழிகளையும்
அழகிற்கு மயில்களையும்

மடமைக்கு வாத்துக்களையும்
அறிவுக்கு ஆந்தைகளையும்

பொறுமைக்கு நாரைகளையும்
வலிமைக்கு பருந்துகளையும்

சண்டைக்குச் சேவல்களையும்
சமாதானத்திற்குப் புறாக்களையும்

நளினத்திற்கு அன்னங்களையும்
ஒற்றுமைக்குக் காக்கைகளையுமாய்

அடையாளப்படுத்திப் பார்க்கிறான்
மனிதத்தோடு தன்னை அடையாளப்படுத்த
அருகதையற்றுப் போன மனிதன்.!

Manohari

best tamil kavithai manohari kavithai manithan adaiyalam manithum paravaikal myil killzi myna parudhu vankozli vathu kakai annum
We will be happy to hear your thoughts

Leave a reply

Manohari Madan
Logo
Reset Password